பயிற்சி 11 - பொருளுணர்ந்தெழுதுதல்
தந்தையும் பிள்ளைகளும்
ஒரு கிராமத்தில் தந்தையும் தாயும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இந்த நான்கு பிள்ளைகளும் பெற்றோர் சொல் கேட்பதில்லை. ஒரு வேரையும் செய்யாமல் சோம்பேர்களாகத் திரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்று தந்தை நினைத்தார்.
ஒரு நாள் தந்தை தன் பிள்ளைகளைக் கூப்பிட்டார். அவர்களிடம் பின்வருமாறு சொன்னார் - பிள்ளைகளே, நம்முடைய நிலத்தில் புதையல் இருக்கிறது. அதை நீங்கள் கண்டுபிடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்தச் சோம்பேறிப் பிள்ளைகள் புதையல் என்றவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். மண்வெட்டி, கடப்பாறை முதலியவைகளை எடுத்துக்கொண்டு போய் நிலத்தை வெட்டித் தோண்ட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் நிலம் முழுவதும் தோண்டித் தேடிய பின்னும் புதையலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்பு,தங்கள் தந்தையிடம் சென்று, - 'அப்பா, நீங்கள் சொன்னபடி நிலத்தை நன்றாகத் தோண்டிப் பார்த்துவிட்டோம். ஆனால், புதையல் கிடைக்கவில்லை', என்றார்கள்.
அப்போது மழைக்காலம். தந்தை அவர்களிடம் கொஞ்சம் விதை நெல்லைக் கொடுத்து, 'இதைக் கொண்டுபோய் நிலத்தில் விதையுங்கள். கொஞ்ச நாட்கள் சென்றவுடன் புதையல் உங்கள் கண்களுக்குத் தெரியும்', என்று சொன்னார். அவர்களும் அப்படியே செய்தார்கள்.
அந்த வருடம், நெல் நான்கு மடங்கு அதிகமாக விளைந்த்து. அதைக் காண்பித்துத் தந்தை தன் பிள்ளைகளிடம் சொன்னார்,'பிள்ளைகளே, இப்படி நீங்கள் நிலத்தில் வேலை செய்தீர்களானால், இந்த நிலம் நமக்கு புதையலைப் போல தானியங்களை அள்ளிக் கொடுக்கும். அதை விற்று நீங்கள் கொஞ்ச காலத்தில் பணக்காரர்களாகலாம்,' என்றார். அந்த நால்வரும் தந்தையின் புத்திமதியைக் கேட்டு, உழைத்து சுகமாக வாழ்ந்தார்கள். ஆதலால், பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டும்.